அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது, இன்று பிற்பகல் விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கான உட்கட்சி தேர்தல் டிசம்பர்-7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கான உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.