அமமுகவிற்கு “பரிசுப்பெட்டி” சின்னம் : தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் நன்றி..

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குக்கர் சின்னம் ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தினகரன் அணிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க உத்தரவிட்டது.

அதன் படி தேர்தல் ஆணையம் 39 சின்னங்களை கொடுத்து எந்த சின்னம் வேண்டும் எனக் கேட்டனர். அதன்படி பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார் தினகரன்.

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 59 வேட்பாளர்களுக்கும் “பரிசுப்பெட்டி” சின்னத்தை ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.