முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். என்.எல்.சி. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வருடன் அன்புமணி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதல்வரை சந்தித்து பேசியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.