அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது.
கலையரசன் ஆணையத்தின் அவகாசம் பிப்ரவரி 11ம் தேதியுடன் முடிந்த நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சூரப்பா பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடையவுள்ள நிலையில் புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் குழு அமைக்க ஆலோசிக்கப்பட்ட வருகிறது