தேசத்துரோக வழக்கு பதியக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு…

தேசத் துரோக வழக்குகள் யாருக்கு எதிராக பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசத் துரோக வழக்கு 124 (ஏ) சட்டத்தின் படி யார் மீதும் வழக்கு பதியக் கூடாது என தற்காலிகமாக தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஒன்றிய அரசு சட்டத்தை மாற்றியமைக்கும் வரை இந்த சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. தேசத் துரோக வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்க தடைவிதித்துள்ளது.
மேலும் தேசத்துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளது.