பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்?: நபார்டு வங்கியில் மேலாளர் பணியிடங்கள் …

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலாளர்( Manager) மற்றும் துணை மேலாளர்(Assistant Manager) பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-30 ஆகும். www.nabard.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 17.07.21 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.08.21 ஆகும்.

முதனிலை தேர்வு( Preliminary Exam), மெயின் தேர்வு( Main Exam), நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.nabard.org என்ற விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.