விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் : பிரியங்கா அழைப்பு..

விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் என அழைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில், இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற பிரியங்கா காந்தியை நேற்று அதிகாலை முதல் காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எந்த எப்.ஐ.ஆரும் இல்லாமல் தன்னை 2ஆவது நாளாக தடுப்புக்காவலில் வைத்திருப்பது ஏன் என பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்