ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் : இந்திய அணி 285 ரன்கள் குவிப்பு..

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களமிறங்க உள்ளது.

சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இது தவானின் 14-வது சர்வதேச சதம் என்பது குறிப்பிடத்தக்கது.