சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்குத் தனித்துறை தொடக்கம்..

சீனாத் தலைநகர் பெய்ஜிங் நகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 மாணவர்கள் ‘தமிழ் மொழி மற்றும் இலக்கியம்’ பற்றிய 4 வருட பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.