பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு..

🔹நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பாபா ராம்தேவ் சமர்ப்பித்த 2-வது பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

🔹நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🔹கொரோனா காலத்தில் தாங்கள் கண்டுபிடித்த மருந்தை குறித்த மிக தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை.

🔹நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பொழுது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள் அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?

உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் காட்டமாக தெரிவித்தனர்.