ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ : சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை ..


இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவை நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களைக் காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவுக்கு, மக்களின் விடுதலைக்காக போராடிய நெல் சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.