சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி ஸ்ரீ செந்துார் நாயகி 99 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தைப் பிடித்து சாதனை

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து சாதனைபடைத்துள்ளனர்.

மாணவன் ராகுல்ராஜ்ய வர்தன் 97.2 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டாம்இடம்


செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி ஸ்ரீ செந்துார் நாயகி 99 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவன் ராகுல்ராஜ்ய வர்தன் 97.2 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,மாணவி ஹரிணிஸ்ரீ 96.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவி ஹரிணிஸ்ரீ 96.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம்


செட்டிநாடு பப்ளி்க் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்ளை செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் திரு.SP .குமரேசன் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன் திரு.K. அருண்குமார் அவர்களும் தனது மனமார்ந்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.
பள்ளி முதல்வர் திருமதி . உஷா குமாரி மற்றும் துணை முதல்வர் திருமதி. பிரேம சித்ரா உள்பட ஆசிரியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயரிய நிலையை அடைய பள்ளியின் சார்பில் வாழ்த்தினார்கள்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்