சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்து, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனாம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்