உ.பியில் 14 குழந்தைகளுக்கு ஹேபிடைஸ் நோய் தொற்று ரத்தத்தை ஏற்றியது : மன்னிக்கவே முடியாதது: கார்கே…

உத்திர பிரதேசத்தில் 14 குழந்தைகளுக்கு எச்ஐவி எய்ட்ஸ், ஹேபிடைஸ் நோய் தொற்றை ஏற்படுத்தும் ரத்தத்தை ஏற்றிய பாஜக அரசின் குற்றம் மன்னிக்கவே முடியாதது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் தல சீமியா நோயினால் பாதிக்கப்பட்டு 6 முதல் 16 வயது வரையிலான 14 குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதில் ஏழு குழந்தைகளுக்கு ஈரல் அலர்ச்சி நோயை ஏற்படுத்தும் ஹேபிடைஸ் பி மற்றும் ஐந்து குழந்தைகளுக்கு ஹெபடைசி வகையிலான நோய் தொற்றும் இரண்டு குழந்தைகளுக்கு எச்ஐவி எயிட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.