சென்னை கண்ணகி நகரில் அரசு பேருந்தில் ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கண்ணகி நகரில் தி.நகர் செல்லும் சாதாரண கட்டண பேருந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகமெங்கும் நடைபெறும் 6-வது தடுப்பூசி முகாம் இன்று 50000 இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை கண்ணகிநகரில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் . பார்வையிட்டு திரும்பும் போது ராஜீவ் காந்தி சாலையில் நின்ற அரசு பேருந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், பெண் பயணிகளிடம் பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகைய ஆய்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.