சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலை…

சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதில் பெரியார், முத்துராமலிங்கத்தேவர், வாஞ்சிநாதன், ரெட்டைமலை சீனிவாசன், அழகுமுத்துக்கோன் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசு சார்பாக டெல்லிக்கு அனுப்பிய வேலுசாச்சியார்,வஊசி,பாரதியார் மருதிருவர் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகள் அடங்கிய 2 ஊர்திகள் புதியதாக இணைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.