நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் :வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“என் ட்வீட்டுகளுக்காக நான் மன்னிப்பு கோர மாட்டேன். நீதித்துறையின் அடித்தளத்தையே அசைத்துப்பார்க்கும் வலிமை அந்த இரண்டு ட்வீட்டுகளுக்கு உண்டு என என்னால் நம்பமுடியவில்லை. என் கருத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.” உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில்
என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்கத் தயார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக அறிவித்தார்.

முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக பதிவிட்டதாக அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இன்று தண்டனை குறித்து தெரிவிப்பதாக தெரிவித்திருந்தத குறிப்பிடத்தக்கது