டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்துகின்றனர்.

வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் சங்கத்தினைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தன.

இதையடுத்து இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

பின்னர் அங்கிருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.