தேவபட்டு மஞ்சுவிரட்டு :தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு..

தேவபட்டு மஞ்சுவிரட்டை முன்னிட்டு தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு செய்தார்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக வருடந்தோறும் தை மாதம் அந்தரநாச்சியம்மன் கோயிலில் மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சையாக நடைபெறும் .இந்தாண்டு வரும் 25.01.2022 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பாக தேவகோட்டை கோட்டாட்சியர் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது காரைக்குடி வட்டாட்சியர், தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர், கல்லல், கல்லல் வருவாய் ஆய்வாளர், கால்நடைத்துறை, கல்லல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மற்றும் தேவபட்டு கிராமத்தினர் உடன் இருந்தனர் .

செய்தி & படங்கள்
சிங்தேவ்