திமுக பொதுக்குழு : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்..


சென்னையில் திமுக பொதுக்குழுவில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயராத சமூகநீதி போராளி என்று புகழாரம் சூட்டப்பட்டது.

கலைஞர் மறைவை அறிந்து அதிர்ச்சியில் இறந்த திமுக-வினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் 248 பேர் குடும்பத்தினருக்கு தி.மு.க. பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. தமிழக உரிமைகளை தவறாமல் நிலைநாட்டியவர் எனவும், நிறைவான நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர் வாஜ்பாய் என புகழாரம் சூட்டப்பட்டது.

முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாழ்நாள் முழுவதும் அரசியல் பண்பாட்டை போற்றியவர் பர்னாலா என்று புகழாரம் சூட்டப்பட்டது.

கலைஞர் மறைவை அறிந்து அதிர்ச்சியில் இறந்த திமுகவினர் 248 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் 248 பேர் குடும்பத்தினருக்கு தி.மு.க. பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது