திமுக எம்.பி கனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்..

திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. யின் சென்னை இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது காவல்துறை
நாளொன்றுக்கு 5 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு (செவ்வாய்கிழமை) முதல் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை

இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை திமுக எம்.பி., கனிமொழி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கொரோனா நோய் தடுப்பு பணிக்காக திரும்ப பெற்றதாக தெரிவித்துள்ளது.