பட்டாசு ஆலையில் விபத்து : பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே விரகனுாரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.

இதில் ஆலையில் வேலைபார்த்தவர்களில் பெண்ள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் ஆலையினுள் சிக்கியிருப்பதாகவும், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு படையினர் மீட்பு பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.