முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திரகுமாரி கணவர் பாபுவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1991-96 வரை அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அமைச்சராக இருந்த போது இந்திரகுமாரி கணவர் பாபு நடத்திய அறக்கட்டளைக்கு முறைகேடாக ரூ.15.45 லட்சம் அரசு நிதி ஒதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.