நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு…

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது.

இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் பதிவுசெய்திருந்த நிலையில், 2019-ம் ஆண்டில் 19 ஆயிரத்து 355-ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டில் நடைபெறும் தேர்வுக்கு 7 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பதிவுசெய்துள்ளனர். நீட் பயிற்சி வகுப்புகளை அரசு மூடுவதன் காரணமாக நீட் தேர்வில் பங்கேற்க அரசு பள்ளி

மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கல்வித் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.