மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை : ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்பு..

மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை

18-ஆம் நுாற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிர் மாய்த சிவகங்கையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோரர்களின் 219-வது குருபூஜை இன்று அவர்கள் சமாதியில் நடைபெற்று வருகிறது.

வருடந்தோறும் மருது சகோதர்களுக்கு அக்டோபர் 27-ந்தேதி குருபூஜை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் சொர்ண காளீஸ்வர் கோயில் கோபுரம் முன்அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் சமாதியில் ஏராளமான பொதுமக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

500-க்கும் மெற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி மருதிருவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
அலகு குத்தி காவடி எடுத்து மரியாதை செய்து வருகின்றனர்.