வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான்: ஸ்டாலின்

வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.

சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள் சந்திக்கும் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என்று தெரிவித்தார்

இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் தான் காரணம் என்று கூறி நடத்தப்பட்ட இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் 4 நிமிடங்கள் வரை மட்டுமே கூட்டத்திற்கான காரணம் பற்றி முதல்வர் பழனிசாமி பேசினார்.

இந்த கண்டன கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணிநேரங்கள் வரை பேசிய அவர், திமுக-வின் ஆட்சியின் போது ஏற்பட்ட குறைகளை முதல்வர் சூட்டிக்காட்டினார்

இந்நிலையில், வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ‘ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்!

ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே.

அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே!

இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா? இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்!’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.