இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு : உஸ்பெகிஸ்தான் தகவல்

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது.

இதுபோல் கான்டியா நாட்டிலும் இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து குடித்து 66 உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.