ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போவது என்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இது குறித்து ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக்கிற்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.

ஜெயலலிதா தன் சொத்துகளை உயில் எழுதி வைக்காததால் நிர்வகிக்க நபர் நியமிக்க கோரி அதிமுக பிரமுகர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.