காரைக்காலில் பலத்த மழை..

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் காரைக்கால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து மேலும் மழையை எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது