காரைக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..

காரைக்குடி ஐந்து விளக்கு அருகே அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சொத்துவரி உயர்வு,மின்கட்டண உயர்வு,பால் விலையுர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிமுக அரசின் மக்கள் திட்டங்களை முடக்கியதைக் கண்டித்து காரைக்குடி நகர அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், அதிமுக நிர்வாகிகள் தாகூர்,போஸ் மற்றும் காரைக்குடி நகர் மன்ற அதிமுக உறுப்பினர்கள் தேவன்,குருபாலு, ராம்குமார், பிரகாஷ், அமுதா, கனகவல்லி, ராதா உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்