காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி(சிபிஎஸ்இ ):12 மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் சாதனை…

மத்திய தேர்வாணையத்தால்(சிபிஎஸ்இ ) நடத்தப்படும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இந்த தேர்வு முடிவுகளில்..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரி அருகே உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 12 மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ செந்துார் நாயகி சிவக்குமார் என்ற மாணவி 95.3 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். 2-வது இடத்தில் தனுஷ் ராஜ் 95 சதவிகிதம் பெற்றுள்ளார். 3-ஆம் இடத்தில் ராகுல் ராஜ்யவர்த்தன் 91.2 சதவிகிதம் பெற்றுள்ளனர்.


10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹர்ஷிதா 97.3 சதவிகிதம் மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், விஜய குமார் 96 சதவிகிதம் பெற்று 2-ஆம் இடமும், ஸ்ரேயா சிவக்குமார் 96 சதவிகிதம் பெற்று 2-ஆம் இடத்தை பகிர்ந்துள்ளார். கார்த்திக் பாலன் 95.5 சதவிகிதம் பெற்று 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.


இது போல் தமிழ் பாடத்தில் ஹர்ஷிதா 100 மதிப் பெண் பெற்றுள்ளார், கணித பாடத்தில் தர்ஷன மலர் மற்றும் சோலை சுதர்ஷன் சோலையப்பன் 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்,செயற்கை நுண்ணறிவு பாடத்தில் அம்சவல்லி மகாதேவன், முகமது அப்துல் ரகுமான் அக்பர்,விஜய குமார்,சங்கமித்ரா அரவிந்த குமார், கிர்த்திஷாகா முழுப் மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்,இரண்டு, மூன்றாம் இடம் பிடித்து சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர்,முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்
செய்தி & படங்கள்
சிங்தேவ்