காரைக்குடி அருகே கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மாங்குடி எம்எல்ஏ வழங்கினார்..

காரைக்குடி அருகே கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி நிவாரணம் வழங்கினார் உடன் காரைக்குடி வட்டாச்சியர் மாணிக்கவாசகம்

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது பெய்துவருகிறது. கனமழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அரியக்குடியைச் சேர்ந்த வீரப்பன் (வயது 83) முதியவர் உயிரிழந்தார்.
கனமழையால் உயிரிழந்த வீரப்பன் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.4,00,000 லட்சத்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு முழுநிவாரணமாக தலா ரூ. 5000 யென ரூ.1,60,000 வழங்கினார். பகுதி நிவாரணமாக 56 பேருக்கு தலா ரூ.4100 வீதம் ரூ.2,29,600 வழங்கினார். பாதிக்கப்பட்ட 88 பேருக்கும் ரூ.3,89,600 நிவாரண நிதியாக வழங்கினார்.

சட்டமன்ற மன்ற உறுப்பினர் மாங்குடி தன் சொந்த செலவில் பாதிக்கப்பட்டோருக்கு 5 கிலோ அரசி,பாய் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்