காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சாதனை…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இத்தகைய சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் திரு.V. அய்யப்பன் பாராட்டினார்.
மாநில அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் 16-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஏற்கனவே சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பள்ளியின் சார்பில் பங்கேற்று போட்டியில் விளையாடிய வெற்றி பெற்ற ஆகாஷ், லட்சுமி மித்தரன்,ஜோஹித், வீரக்கிரித்திஷ், சூர்யக்கிரித்திஷ், ஹர்ஜித்ராம், சூரியா, ஸ்ரீதர் மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு.V. அய்யப்பன், பள்ளி முதல்வர் குமரன், உடற்கல்வி இயக்கனர் லட்சுமணக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்