முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு..

ஸ்பெயின் நாட்டின் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் திரு. நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், இராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்கள்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr.Rafael Mateo மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் Mr.Manuel Majon Vilda ஆகியோர், தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்கள்.