காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாம்: கார்த்திசிதம்பரம் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாமினை தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கினார்.
உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. மாங்குடி அவர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பல மாணவர்கள் இந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
இதுபோல் சிவகங்கையிலும் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்