கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்: மு.க.ஸ்டாலின் ..

கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

நிவர் புயலை தொடர்ந்து வந்த புரெவி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அடுத்த தினமான இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு ஆய்வு செய்தார். அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சேகர் பாபு ஏற்பாட்டில் நலத்திட்ட பொருட்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஒவ்வொருவருக்கும் அரிசி 5 கிலோ, பாய், தலையணை, போர்வை, சர்க்கரை, மைதா, பிஸ்கட், எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட அடிப்படை பொருட்களை ஸ்டாலின் அந்த ஏற்ப்பாட்டின் படி வழங்கி வருகிறார். ஜி.கே.எம்.நகர், பூம்புகார் நகர், அஞ்சுகம் நகரில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.