எல்.இ.டி தெரு விளக்கு பல்பு வாங்கியதில் முறைகேடு : அமைச்சர் வேலுமணி மணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

எல்.இ.டி தெரு விளக்கு பல்பு வாங்கியதில் முறைகேடு அமைச்சர் வேலுமணி மணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் பேசினார். மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.
தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்
தமிழகமெங்கும் தெரு விளக்கு எல்இடி பல்பு வாங்கியதில் அமைச்சர் வேலுமணி முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஒரு தெரு விளக்கு எல்இ.டி பல்பு ரூ 450 விற்கும் போது அரசு ரூ 3737 க்கு வாங்கியதாக குற்றம் சாட்டினார். ரூ1500 பல்பு ரூ 14000 -க்கு வாங்கியதில் மாபெரும் முறைகேடு நடைபெற்றதாக கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.