மார்ச் 23 -ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..


நாடு முழுவதும் மார்ச் 23 -ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.