மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..


கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒகி புயலால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை ஒதுங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்க மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீட்பு பணியில் 9 கப்பல்களும், 18 விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் 173 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.