கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!

திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையை அவதூறாக பேசியதாகாவும், ஐபில் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது என 2 வழக்குகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் பெற கருணாஷ் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாஸ்க்கு இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் தொடர்ந்து 30 நாட்களுக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் நாளை(29.09.18) வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.