பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரண்..

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

குணசீலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மீது சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித்தருவதாக ரூ.76.50 லட்சம் வாங்கியதா குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா 8 மாதங்கள் தலைமறைவாகயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.