கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்

கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சரவண பவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர் சாந்தகுமார் கடந்த 2001ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.

சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொன்றதாக ராஜகோபால் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, ராஜகோபால் உள்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.