டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

அதிமுக வேட்பாளர்களின் மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை கோரி கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என கூறி இருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டது.