நீட் விலக்கு :சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் :அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து இன்று நடந்த சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.