நவ.26-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..

வங்க கடலில் தெற்கு அந்தமான் அருகே வரும் நவம்பர் 26-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னனை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.