பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது : மா.கம்யூ.,கண்டனம்…

சீத்தாராம் யெச்சூரி

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பிட்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது இந்திய (மார்க்சிஸ்ட்)கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் சாடினார்.