பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் முறைகேடு : பொது மக்கள் போராட்டம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர்.

வேலம்பாடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை விற்பனையாளர் சீனிவாசன் என்பவர்,

முதியோர் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முதியோர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நியாயவிலைக்கடையை முற்றுகையிட்டனர்.

மேலும் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் திருமலையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.