பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை தேவை :உயர்நீதிமன்றத்தில் முறையீடு

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கிடு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் வாராஹி முறையிட்டுள்ளார்.
போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் வாராஹி என்பவர் முறையீடு செய்துள்ளார்.
மேலும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுத்துள்ளார்