சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா கைது…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவை கேரளா காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவில் நடை கடந்த அக்டோபா் மாதம் திறக்கப்பட்ட நிலையில் பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறி போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது கோவிலிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவைச் சோ்ந்த ரெஹானா பாத்திமாவும், ஆந்தராவைச் சோ்ந்த பத்திாிகையாளா் ஒருவரும் காவல்துறையினரிடம் அனுமதி கோாினா்.

இதனைத் தொடா்ந்து அவா்கள் காவல்துறையினரின் உதவியுடன் பலத்த பாதுகாப்புடன் கோவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஆனால், பெண்கள் அனுமதிக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் வலுப்பெற்றதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனா்.

மேலும் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முன்னதாக சபரிமலை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்ததால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுத்தன.

இதனைத் தொடா்ந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து தொிவித்ததாகவும், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் ரெஹானா மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில் கொச்சியில் வசித்து வந்த ரெஹானாவை பத்தனம்திட்டா காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா்.

சா்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதன் பேரில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.