முதுபெரும் கம்யூ., தலைவர் சங்கரய்யாவிற்கு “தகைசால் தமிழர் விருது”: தமிழக அரசு அறிவிப்பு..

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவிற்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அன்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுக்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் எனத் தெரிவித்தார் இதனையடுத்து முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவிற்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Image

தமிழ்நாடு அரசின் ’தகைசால் தமிழர்’ விருதிற்கு சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
“முதல் விருது பெறும் முதுபெரும் தலைவர் திரு சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வழங்கவுள்ளார்.